5 பொங்கல் சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து.. தெற்கு ரயில்வே சொன்ன காரணம் இதுதான்!

Published : Jan 14, 2026, 07:16 PM IST

பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்டு இருந்த 5 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே திடீரென ரத்து செய்துள்ளது. என்னென்ன ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன? என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
13
பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் தென் மாவட்டங்களுக்கு படையெடுத்து சென்றனர். மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

23
5 சிறப்பு ரயில்கள் ரத்து

இந்த நிலையில், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் பொங்கலுக்கு அறிவித்த 5 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே திடீரென ரத்து செய்துள்ளது. அதாவது ஜனவரி 19ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06011) ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஜனவரி 21 அன்று மதியம் 12.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (வ.எண்: 06053) ரத்து செய்யப்பட்டுள்ளது.

33
சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு ரயில்

ஜனவரி 19 அன்று இரவு 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு ரயில் (வ.எண்: 06033) ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 21 அன்று நள்ளிரவு 12.35 மணிக்கு போத்தனூரிலிருந்து புறப்பட வேண்டிய போத்தனூர் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (வ.எண்: 06024) ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல் ஜனவரி 21 அன்று மதியம் 1.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - போத்தனூர் சிறப்பு ரயிலும் (வ.எண்: 06023) ரத்து செய்யப்பட்டுள்ளது

பயணிகளிடம் வரவேற்பு இல்லை

மேற்கண்ட சிறப்பு ரயில்கள் அனைத்தும் தலா 1 முறை மட்டுமே இயக்கப்பட இருந்தன. ஆனால் இந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டவில்லை. பயணிகள் இல்லாத ரயிலை இயக்குவது பெரும் நஷ்டத்துக்கு வழிவகுக்கும் என்பதால் தெற்கு ரயில்வே இந்த ரயில்களை ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories