
தமிழகத்தில் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் கல்லூரியைத் தேர்வு செய்யும்போது, கட்டணம், இடம், பாடப்பிரிவு மட்டுமல்லாமல் அந்தக் கல்லூரியின் கல்வித் தரம் மற்றும் தேர்ச்சி நிலையும் முக்கியமாக பார்க்க வேண்டியதாக இருக்கிறது. அதற்கு காரணம், அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் தொடர்பான ஒரு ஆய்வில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்.
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள 24 பொறியியல் கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதிய ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அதாவது, 2021-ம் ஆண்டு நவம்பர்–டிசம்பர் முதல் 2025-ம் ஆண்டு நவம்பர்–டிசம்பர் வரை நடைபெற்ற பருவத் தேர்வுகளில், இந்த 24 கல்லூரிகளைச் சேர்ந்த 2,425 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
இதையும் படிங்க : Sun-Mercury Conjunction : ஒன்று சேரும் சூரியன்-புதன்! தடைகளை உடைத்து முன்னேறப்போகும் 4 ராசிகள்!
இந்த எண்ணிக்கையைப் பார்த்தால் பிரச்சினையின் அளவு புரியும்.
மொத்தம் 2,425 மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொண்டுள்ளனர்.
பொதுவாக பொறியியல் பருவத் தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை, நவம்பர்–டிசம்பர் மற்றும் ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெறும். இந்த நான்கு ஆண்டு காலத்தில் நடைபெற்ற தேர்வுத் தரவுகளை ஆய்வு செய்தபோது, இந்த 24 கல்லூரிகளிலும் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெற்றதாக பதிவாகவில்லை. இது ஒரு தேர்வில் ஏற்பட்ட தோல்வி அல்ல. தொடர்ந்து பல பருவத் தேர்வுகளில் காணப்பட்ட நிலை என்பதுதான் இந்தத் தகவலை முக்கியமாக்குகிறது.
இதையும் படிங்க : Fish Biryani : கேரளா ஸ்டைலில் மலபார் மீன் பிரியாணி! அடிபொலி டேஸ்ட்டில் செய்வது எப்படி?
24 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது மட்டுமல்ல. அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் தொடர்பான ஆய்வில், கடந்த நான்கு ஆண்டுகளில் 177 பொறியியல் கல்லூரிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனுடன் சில கல்லூரிகளில் காணப்படும் மிகக் குறைந்த மாணவர் சேர்க்கையும் கல்வியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒரு கல்லூரியில் ஒரு பிரிவில் மிகக் குறைவான மாணவர்கள் மட்டுமே இருந்தால், போதுமான கல்விச் சூழல், ஆசிரியர்-மாணவர் தொடர்பு மற்றும் பாடம் சார்ந்த செயல்பாடுகளைத் தொடர்ந்து வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், இத்தகைய கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் தங்கள் பொறியியல் படிப்பை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் முடித்து பட்டம் பெற முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க : Pressure Cooker : குக்கரில் இந்த 7 அறிகுறிகள் இருந்தால் உடனே கவனிங்க! மாற்ற வேண்டிய நேரம் வந்திருக்கலாம்!
தமிழகத்தில் தற்போது 418 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 2,53,806 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 2026-ம் ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 1,99,775 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதாவது, எல்லா கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஒரே மாதிரியாக இல்லை.
35 கல்லூரிகள் — 100% இடங்களும் நிரம்பியுள்ளன.
104 கல்லூரிகள் — 90%-க்கும் அதிகமான இடங்களை நிரப்பியுள்ளன.
மறுபுறம், 24 கல்லூரிகளில் 10%-க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. அதில் 15 கல்லூரிகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதனால், தமிழக பொறியியல் கல்வியில் ஒரு பக்கம் அதிக தேவை உள்ள கல்லூரிகளும், மற்றொரு பக்கம் மாணவர்களை ஈர்க்க முடியாமல் இருக்கும் கல்லூரிகளும் இருப்பது தெரிகிறது.
இதையும் படிங்க : D-Mart : இங்கே குறைவான விலையில் கிடைக்கும் 10 பொருட்கள்! என்னென்ன தெரியுமா?
குறைந்த மாணவர் சேர்க்கையும் மோசமான தேர்வு முடிவுகளும் உள்ள கல்லூரிகள் தொடர்ந்து கலந்தாய்வில் பங்கேற்பதன் காரணம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஒரு பிரிவில் ஒன்று அல்லது இரண்டு மாணவர்கள் மட்டுமே இருந்தால், அவர்களுக்கு தேவையான கல்விச் சூழலை உருவாக்குவதிலும் திறம்பட கற்பிப்பதிலும் சிக்கல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
கல்லூரிகள் தங்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு கடுமையான நடவடிக்கை தேவை என்ற குரலும் எழுத்துள்ளது. மேலும், கடந்த ஆண்டுகளில் போதுமான மாணவர் சேர்க்கையும் தேர்ச்சி விகிதமும் கொண்ட கல்லூரிகளையே கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : Fridge : இந்த 7 காரணங்களால ப்ரிட்ஜ் வெடிக்கலாம்! கவனமா இருங்க!
இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் வி. குமரேசன், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திடம் (DOTE) இருந்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் செயல்பாடுகள் குறித்த தரவுகள் பல்கலைக்கழகத்துக்கு இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தரவுகள் கிடைத்த பிறகு அவற்றை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
24 கல்லூரிகளில் 4 ஆண்டுகளில் 2,425 மாணவர்கள் தேர்வு எழுதியும் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது தேர்வு முடிவுகள் தொடர்பான தரவுகளில் தெரியவந்துள்ளது. ஆனால், இந்த நிலைக்கான முழுமையான காரணம் என்ன, சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு அதிகாரப்பூர்வ ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. எனவே, பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்யும் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை, தேர்ச்சி முடிவுகள், பாடப்பிரிவு, கட்டணம் மற்றும் கல்லூரியின் ஒட்டுமொத்த கல்விச் சூழல் ஆகியவற்றை ஒருசேர பார்த்து முடிவு செய்வது முக்கியம்.
இதையும் படிங்க : Health Insurance : ஒரு ஹாஸ்பிடல் பில்லுக்கு இரண்டு இன்சூரன்ஸ்களை பயன்படுத்துவது எப்படி? இப்படித்தான் செய்யணும்!