பசுமை பள்ளி திட்டம்
அந்த வகையில், பசுமை பள்ளி திட்டம் என்பது, இது ஒரு சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பாகும், இந்த திட்டமானது கடந்த 2023ம் ஆண்டு ஜனவரியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கொண்டு காய்கறி தோட்டம் உருவாக்குவது, நீர் பயன்பாட்டை குறைப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், மழைநீர் சேகரிப்பு, மக்கும் உரம் தயாரிப்பு, கழிவுநீரை மறுசுழற்சி செய்தல், உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.