பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எதிர்பாராத மாற்றம்.. அரசு தேர்​வுத்துறை புதிய உத்தரவு!

Published : Mar 24, 2026, 09:45 AM IST

Exam: 10ம் வகுப்பு பொதுத்​தேர்வில் கணிதம், அறி​வியல், சமூக அறி​வியல் ஆகிய பாடங்​களுக்கு தேர்​வர்​களின் முகப்​புத் தாள்​கள் முதன்மை விடைத்​தாள்​களு​டன் தைக்​கப்​பட்​டுள்​ளதை தேர்​வுக்கு முன்​னரே உறுதி செய்ய வேண்​டும்.

PREV
14
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ் மற்றும் ஆங்கில தேர்வு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மார்ச் 25ம் தேதி கணிதம், மார்ச் 30 அறிவியல், ஏப்ரல் 2 சமூக அறிவியல், ஏப்ரல் 6 விருப்ப மொழிப்பாட தேர்வு நடைபெற உள்ளது.

24
அரசு தேர்வுகள் இயக்ககம்

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான விதிமுறைகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை இந்த பணிக்கு நியமிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

34
தேர்​வுக்கு முன்​னரே உறுதி செய்ய வேண்டும்

இதுகுறித்து அரசு தேர்​வுத் துறை இயக்​குநர் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கையில்: பத்​தாம் வகுப்பு பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இந்த வகுப்​புக்​கான கணிதம், அறி​வியல், சமூக அறி​வியல் ஆகிய பாடங்​களுக்கு தேர்​வர்​களின் முகப்​புத் தாள்​கள் முதன்மை விடைத்​தாள்​களு​டன் தைக்​கப்​பட்​டுள்​ளதை தேர்​வுக்கு முன்​னரே உறுதி செய்ய வேண்​டும்.

44
ஆசிரியர்​களை நியமிக்​கக்​கூடாது

இதுத​விர, சொல்​வதை எழுதுபவர் (ஸ்​கிரைப்) நியமனங்​களில் தேர்வு நடை​பெறும் பாடத்தை பயிற்று​விக்​கும் ஆசிரியர்​களை நியமிக்​கக்​கூடாது. அதே​போல, பத்​தாம் வகுப்பு பொதுத் தேர்​வின் அறை கண்காணிப்பு பணியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிற்​று​விக்​கும் ஆசிரியர்​கள்​தான் நியமிக்​கப்பட வேண்​டும். தேர்​வர்​களுக்கு வழங்​கப்​படும் கோடிடப்​ப​டாத கூடு​தல் விடைத்​தாள்​களை போது​மான அளவு பெற்று வைத்​துக் கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. பத்​தாம் வகுப்பு பொதுத் தேர்​வு​கள் ஏப்​ரல் 6-ம் தேதி​யுடன் நிறைவடைய​ உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Read more Photos on
click me!

Recommended Stories