தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியானது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7,92,494 மாணவர்கள் எழுதினர். இதில் 3,73,178 மாணவர்களும், 4,19,316 மாணவிகளும் அடங்கும். இந்த தேர்வில் 3,47,670 மாணவர்களும், 4,05,472 மாணவிகள் என மொத்தம் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றனர். 39,352 மாணவர்கள் தோல்வி அடைந்தனர். மேலும், 10,049 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தும் தேர்வு எழுத வரவில்லை.