நெல்லை மக்கள் தலையில் இடியை இறக்கிய மாநகராட்சி: குடிநீர் வரி கட்ட இனி சொத்தையே விற்க வேண்டிவரும் ! கட்டணம் 300% உயர்கிறது!

Published : Nov 07, 2025, 09:00 AM IST

Water Tax நெல்லை மாநகராட்சிக் கூட்டத்தில் குடிநீர்க் கட்டணம் 50% முதல் 300% வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை வைப்புத்தொகையும் உயர்கிறது. தீர்மானம் நவம்பர் 10 அன்று தாக்கல்.

PREV
14
மாமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அதிரடித் தீர்மானம்!

திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம், நிதி ஆதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. வருகிற நவம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ள மாமன்றக் கூட்டத்தில், குடிநீர் கட்டணத்தை 50 சதவீதம் முதல் 300 சதவீதம் வரை உயர்த்தும் தீர்மானம் முன்மொழியப்படவுள்ளது. அத்துடன், புதிய பாதாள சாக்கடை திட்டத்திற்கான வைப்புத் தொகையையும் (Deposit Fee) அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால், நெல்லை மாநகர மக்களின் மாதச் செலவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்.

24
பரப்பளவு அடிப்படையில் புதிய குடிநீர்க் கட்டணம்!

குடிநீர்க் கட்டண உயர்வு வீடுகளின் பரப்பளவு மற்றும் கட்டட வகையின் அடிப்படையில் மாறுபடுகிறது.

600 சதுர அடிக்கு கீழ் உள்ள வீடுகள்- புதிய கட்டணம் (மாதம்) ₹120

வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள்- புதிய கட்டணம் (மாதம்) ₹360

அதேபோல, 600-1,200 சதுர அடி, 1,200-1,800 சதுர அடி, 1,800-3,500 சதுர அடி, மற்றும் 10 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கும் தனித்தனியாகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, உயர்வுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயன்பாட்டிற்கு ஏற்ற கட்டணத்தை நிர்ணயிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

34
பாதாள சாக்கடை வைப்புத்தொகையும் அதிகரிப்பு!

குடிநீர்க் கட்டண உயர்வு மட்டுமின்றி, பாதாள சாக்கடை திட்டத்தில் சேருவதற்கான வைப்புத் தொகையையும் மாநகராட்சி உயர்த்த முடிவெடுத்துள்ளது. முன்னர் பொதுவாக ₹5,000 ஆக இருந்த வைப்புத் தொகை, இப்போது கட்டடத்தின் பரப்பளவைப் பொறுத்து வேறுபடுகிறது.

• 600 சதுர அடி வரை உள்ள வீடுகள்: ₹7,500

• வணிகம் சார்ந்த கட்டடங்கள்: ₹10,000

• தொழில் நிறுவனங்களின் கட்டடங்கள்: ₹15,000

மேலும், 1,200 சதுர அடி கட்டடங்களுக்கு ₹10,000 எனவும், 10 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு ₹40,000 எனவும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

44
ஒப்புதலுக்குப் பின் அமல்: மாநகராட்சி தகவல்!

நவம்பர் 10 அன்று நடைபெறும் மாமன்றக் கூட்டத்தில் இந்தக் கட்டண உயர்வு குறித்த தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். கவுன்சிலர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இந்த புதிய கட்டண உயர்வுகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டண உயர்வை மாநகர மக்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories