குடிநீர்க் கட்டண உயர்வு மட்டுமின்றி, பாதாள சாக்கடை திட்டத்தில் சேருவதற்கான வைப்புத் தொகையையும் மாநகராட்சி உயர்த்த முடிவெடுத்துள்ளது. முன்னர் பொதுவாக ₹5,000 ஆக இருந்த வைப்புத் தொகை, இப்போது கட்டடத்தின் பரப்பளவைப் பொறுத்து வேறுபடுகிறது.
• 600 சதுர அடி வரை உள்ள வீடுகள்: ₹7,500
• வணிகம் சார்ந்த கட்டடங்கள்: ₹10,000
• தொழில் நிறுவனங்களின் கட்டடங்கள்: ₹15,000
மேலும், 1,200 சதுர அடி கட்டடங்களுக்கு ₹10,000 எனவும், 10 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு ₹40,000 எனவும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.