பின்னர் மாணவர்கள் அனைவரும் எழுந்து அலறி கூச்சலிட்டபடியே அவசர அவசரமாக வெளியில் ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் தீ மளமளெவன பேருந்து முழுவதும் பரவியது. இந்த தீ விபத்து குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறைியனருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனாலும், பேருந்து முற்றிலும் சேதமானது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.