சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், அய்யாப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 33). மேலும் அதே பகுதியை சேர்ந்த நித்தியா (33) என்ற தோழியோடு சேர்ந்து திருமுல்லைவாயல் பகுதியில் நியோ பிட்னெஸ் ஜிம் எனும் உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வருகின்றனர். இதில், சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மின் ஆக பணியாற்றும் ஆவடி கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் உடல் பருமனை குறைக்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜிம்மில் உறுப்பினராக சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.