அடித்து ஊற்றும் மழை...! ஒரு நாள் மழைக்கே வெள்ளக்காடாக மாறிய சென்னை..! Exclusive புகைப்படங்கள்!
First Published Oct 17, 2019, 1:20 PM ISTவடகிழக்கு பருவமழை இன்றைய தினம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது.
கிண்டி, திருவல்லிக்கேணி, தாம்பரம், ஆவடி, அம்பத்தூர், என 20க்கும் மேற்பட்ட இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது.
வடகிழக்கு பருவ மழையால், சென்னை மக்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும், பள்ளி, கல்லூரி, மற்றும் வேலைக்கு செல்லும் பலர் சிரமங்களும் ஆளாகினர்.
இது குறித்த புகைப்படங்கள் இதோ...