இடைக்கால தடை போட்ட கோர்ட்! அப்பாடா! நிம்மதி பெருமூச்சு விடும் எடப்பாடி பழனிசாமி!

Published : Mar 15, 2025, 07:37 AM ISTUpdated : Mar 15, 2025, 07:39 AM IST

Edappadi Palanisamy Case: தயாநிதி மாறன் மீது எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

PREV
14
இடைக்கால தடை போட்ட கோர்ட்! அப்பாடா! நிம்மதி பெருமூச்சு விடும் எடப்பாடி பழனிசாமி!
Dayanidhi Maran

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி. தயாநிதி மாறன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி்க்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

24
Edappadi Palanisamy

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தயாநிதி மாறன் தொகுதி நிதியை முறையாக செலவிடவில்லை என நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையிலேயே தேர்தல் பிரசாரத்தின் போது பேசியதாகவும், இது அவதூறாகாது என்பதால் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஜெயில்ல போடுங்க! சொத்துக்களையும் முடக்குங்க! சொல்வது யார் தெரியுமா?

34
chennai high court

இதுதொடர்பாக வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், திமுக எம்.பி. தயாநிதி மாறனுக்கு எதிராக நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையிலுமே மனுதாரர் அவ்வாறு பேசினார். மற்றபடி அவர் வேறு எந்த அவதூறு கருத்துக்களையும் கூறவில்லை என்றார்.

44
defamation case

திமுக எம்.பி. தயாநிதி மாறன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் அந்த செய்திக்கு சம்பந்தப்பட்ட நாளிதழ் வருத்தம் தெரிவித்து விட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் மனுதாரர் வேண்டுமென்றே தயாநிதி மாறன் மீது குற்றம் சாட்டி பேசியது அவதூறானது என வாதிட்டார். இதையடுத்து நீதிபதி இந்த வழக்கில் தயாநிதி மாறன் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்ரல் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.  மேலும் எடப்பாடி பழனிசாமி்க்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

Read more Photos on
click me!

Recommended Stories