நேற்றைய தினம் சென்னையில் நள்ளிரவு 1 மணி அளவில் இடி-மின்னலுடன் பெய்ய துவங்கிய மழை, விடிய விடிய கொட்டி தீர்த்தது. காலை முதல் இடைவிடாது, தூறல் போட்டு கொண்டிருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்லும் பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் இன்றும் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. நேற்று பெய்த மழையால் இன்று அவதி படும் மக்களின் Exclusive புகைப்படங்கள் இதோ..