இந்நிலையில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் சுந்தர் இன்று காலை உயிரிழந்தார். இதனையத்து, போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பச்சையப்பன் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி, கல்லூரிக்கு வரும் மின்சார ரயில் வழித்தடங்கள் ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்களில் பயணிக்கும் மாணவர்களின் கல்லூரி அடையாள அட்டைகளும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.