சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான அணியை அறிவிக்கும்போது, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவரை ஐந்து வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவ குழு கூறியது. அதன்படி அவர் இப்போது ஓய்வு எடுத்து வருகிறார்.
பும்ரா ஐபிஎல்லில் எத்தனை போட்டிகளில் விளையாடமாட்டார் என்பது உறுதியாக தெரியவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி மார்ச் 23 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும், மார்ச் 29 அன்று குஜராத் டைட்டன்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது. இந்த போட்டிகளில் பும்ரா இடம்பெற வாய்ப்பில்லை.