ஐபிஎல் போட்டிகளில் அணிகள் 2 முறைக்கு மேல் மெதுவாக பந்துவீசினால் அந்த அணிகளின் கேப்டன்களுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு வந்தது. ஐபிஎல் 2024 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மெதுவாக பந்துவீசியதற்காக ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா விளையாட தடை விதிக்கப்பட்டது. இதன்பிறகு ஐபிஎல் கேப்டன்கள் முறையிட்டதால் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கும் விதி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வான்கடே ஸ்டேடியத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையை வீழ்த்தி சாதனை படைத்த ஆர்சிபி!