சூர்யகுமார் யாதவ்விற்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? இந்தியா ஆடும் லெவன் இது!

First Published Jan 12, 2023, 12:36 PM IST

இலங்கைக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ்விற்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - இலங்கை முதல் ஒரு நாள் போட்டி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி தற்போது 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

ரோகித் சர்மா

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ்வும், யுஸ்வேந்திர சகாலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ்விற்கும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஷான் கிஷான்

ஆனால், இஷான் கிஷான் மட்டும் அணியில் தொடர்ந்து இடம் பெறாமல் இருந்து வருகிறார். வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அவர் 210 ரன்கள் எடுத்து இளம் வயதில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை இவர் படைத்திருந்தார். ஆனால், அதன் பிறகு இலங்கைக்கு எதிராக நடந்த டி20 போட்டிகளில் அவர் சரிவர விளையாடவில்லை. இதன் காரணமாக அவர் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.
 

ரோகித் சர்மா 264 ரன்கள்:

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியா வந்த இலங்கை அணி 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றது. இதில் 5 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரின் 4ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் ஹிட்மேன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 264 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தார். ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர், முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், சாதனையும் இவர் படைத்தார்.
 

ரோகித் சர்மா

அதே போன்று இன்று இலங்கைக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் 2ஆவது ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா சாதனை படைப்பார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சூர்யகுமார் யாதவ் மற்றும் குல்தீப் யாதவ்விற்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றால், கடந்தப் போட்டியில் விளையாடிய அதே அணியுடன் இந்தப் போட்டியிலும் இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

இந்திய அணி:

இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சகால்
 

தசுன் ஷனாகா

இலங்கை அணியில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, தில்சன் மதுஷங்காவிற்குப் பதிலாக லகிரு குமாரா இடம் பெறுவார் என்றும், துனித் வெல்லாலாஜிற்குப் பதிலாக மஹீஷ் தீக்‌ஷனா இடம் பெறுவார் என்றும் சொல்லப்படுகிறது.
 

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்ணான்டோ, குசால் மெண்டிஸ், சரித் அசலாங்கா, தனஞ்செயா டி சில்வா, தசுன் ஷனாகா, வணிந்து ஹசரங்கா, துணித் வெல்லாலாஜி அல்லது மஹீஷ் தீக்‌ஷனா, சமிகா கருணாரத்னே, கசுன் ரஜிதா, தில்ஷன் மதுஷங்கா அல்லது லகிரு குமாரா.

click me!