முதல் ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது வென்றது குறித்து பேசிய வைபவ் சூர்யவன்ஷி, ''மிகவும் நன்றாக உணர்கிறேன். இங்குப் பயிற்சிகள் மிகச் சிறப்பாக அமைந்தன. இதற்கு முன்பாக 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) உலகக் கோப்பையிலும் நான் இங்கு விளையாடியுள்ளேன், அதனால் இங்கு விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
பயிற்சியாளர் மற்றும் கேப்டன் உட்பட அணியின் ஒவ்வொருவரும் எனக்கு முழு ஆதரவு அளித்தனர். எனது வழக்கமான T20 ஆட்டத்தை வெளிப்படுத்தவே நான் முயன்றேன். அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்து, நல்ல தொடக்கம் அமைந்துவிட்டால் அதை ஒரு நீண்ட இன்னிங்ஸாக மாற்ற வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது.
பயிற்சிகளின் போது நான் என்ன செய்கிறேனோ, அதையே போட்டிகளிலிலும் அப்படியே வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன். இது எனக்கு ஒரு கனவு நனவான தருணம். சர்வதேச கிரிக்கெட்டில் எனது முதல் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது இதுவாகும்'' என்று தெரிவித்தார்.