Rohit Sharma Injury Update
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்
Rohit Sharma Knee Injury : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 16வது ஐபிஎல் 2025 போட்டி இன்று ஏகனா மைதானத்தில் நடைபெற்றது. இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார். ரோகித் இன்று விளையாட மாட்டார் என்று டாஸ் போடும்போது ஹர்திக் கூறியதால், மும்பை அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
LSG vs MI, Rohit Sharma Injury Update
ஹிட்மேன் சர்மாவின் ரசிகர்கள் ஏமாற்றம்
இதனால் ஹிட்மேன் சர்மாவின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வலைப்பயிற்சியின் போது ரோகித்துக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கேப்டன் ஹர்திக் தெரிவித்தார். கடந்த போட்டியில் ரோகித் இம்பாக்ட் பிளேயராக விளையாடினார். அந்த போட்டியில் அணி வெற்றி பெற்றது. மும்பை அணி கொல்கத்தாவை வீழ்த்தியது.
Hardik Pandya Explanation About Rohit Sharma Injury
லக்னோவுக்கு எதிராக ரோகித் சர்மா வெளியேற்றம்
ரோகித் சர்மா திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறியது பெரிய பின்னடைவாகும். இந்த அணிக்காக அவர் நிறைய பங்களிப்புகளை செய்துள்ளார். அவரது தலைமையில் மும்பை அணி ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளது. தற்போது ஹர்திக் கேப்டனாக இருக்கிறார். ரோகித் அணியில் இருந்தாலே ஒருவிதமான உற்சாகம் இருக்கும். அவர் ஒரு தலைவரைப் போல அணியுடன் இருக்கிறார். அனைத்து வீரர்களுக்கும் உதவி செய்கிறார். அவர் குணமடைந்து விரைவில் அணிக்கு திரும்புவது அணிக்கு சாதகமாக இருக்கும். அவரது காயம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Rohit Sharma Injury Update
ஃபார்மில் இல்லாத ரோகித் சர்மா:
ஐபிஎல் 2025 தொடரில் இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது சென்னை, குஜராத் மற்றும் கொல்கத்தா என்று 3 அணிகளுக்கு எதிராக விளையாடியுள்ளது. இதில் சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில் ரோகித் சர்மா 0 (4) ரன்னுக்கு ஆட்டமிழந்தார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 8 (4) ரன்னுக்கு நடையை கட்டினார். கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டார்.
IPL 2025, Rohit Shatma Not Part in LSG vs MI Match
கவலை அளிக்கும் ரோகித்தின் ஆட்டம்
இந்தப் போட்டியில் அவர் 13 (12) ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதன் மூலமாக இந்த தொடரில் ரோகித் சர்மா தனது மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். இந்த தொடரின் ஆரம்ப கட்டத்தில் ரோகித்தின் ஆட்டம் கவலை அளிக்கும் விதமாக இருந்தது. அவர் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
Lucknow Super Giants vs Mumbai Indians
ஜஸ்பிரித் பும்ரா வருகை குறித்து ஹர்திக் முக்கிய தகவல்
டாஸ் முடிந்த பிறகு ஜஸ்பிரித் பும்ரா குறித்து ஹர்திக் பாண்டியாவிடம் கேட்டபோது, அவர் ஒரு நல்ல செய்தியை தெரிவித்தார். பும்ரா விரைவில் அணியுடன் இணைவார் என்று அவர் கூறினார். காயம் காரணமாக பும்ரா இந்த சீசனில் இதுவரை மும்பை அணிக்காக விளையாடவில்லை. இதனால் அணி ஆரம்பத்தில் 2 போட்டிகளில் தோல்வியடைந்தது. பும்ரா அணியில் இணைந்தால் அணியின் பலம் அதிகரிக்கும். புதிய மற்றும் பழைய பந்துகளில் விக்கெட் எடுக்கும் திறன் அவருக்கு உள்ளது. பும்ரா அடுத்த போட்டிக்குள் அணியுடன் இணைந்தால், ஹர்திக் பாண்டியாவின் அணியின் நம்பிக்கை அதிகரிக்கும்.