பெங்களூருவில் முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு, ஷமி பந்து வீசுவது காணப்பட்டது. அப்போது, இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயருக்கு வலைப் பயிற்சியில் பந்து வீசினார். ஷமியை மோர்ன் மோர்கல் கண்காணித்து வந்தார். குருகிராமில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷமி, "நீண்ட நாட்களுக்குப் பிறகு பந்து வீசியது மகிழ்ச்சியாக இருந்தது.
உடலுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல், பாதியளவு ஓட்டத்தில் பந்து வீசி வந்தேன். நேற்று முழு ஓட்டத்தில் பந்து வீச முடிவு செய்தேன். நூறு சதவீதம் முயற்சித்தேன். நல்ல பலன் கிடைத்தது. விரைவில் மீண்டும் களத்தில் விளையாடுவேன் என்று நம்புகிறேன். எப்போது விளையாட முடியும் என்று தெரியவில்லை. ஆனால் 20-30 ஓவர்கள் வீச முடியும் என்று மருத்துவர்கள் அனுமதி அளித்தவுடன், களத்தில் இறங்குவேன்.