#INDvsENG ஜோ ரூட் இரட்டை சதம்.. மெகா ஸ்கோரை நோக்கி இங்கிலாந்து..! திக்கி திணறும் இந்திய பவுலர்கள்

First Published Feb 6, 2021, 2:09 PM IST

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதமடித்தார். இங்கிலாந்து அணி மெகா ஸ்கோரை நோக்கி ஆடிவருகிறது.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
undefined
இங்கிலாந்து தொடக்க வீரர்கள் டோமினிக் சிப்ளி மற்றும் ரோரி பர்ன்ஸ் இங்கிலாந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 63 ரன்களை சேர்த்தனர். ரோரி பர்ன்ஸ் 33 ரன்களுக்கு அஷ்வின் பந்தில் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் களத்திற்கு வந்த லாரன்ஸ் பும்ராவின் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
undefined
அதன்பின்னர் ஜோ ரூட்டும் சிப்ளியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். 3வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 200 ரன்களை குவித்தனர். முதல் நாள் ஆட்டத்திலேயே ஜோ ரூட் சதமடித்தார். முதல் நாளான நேற்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரில் சிப்ளி 87 ரன்களில் ஆட்டமிழக்க, அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிந்தது.
undefined
2ம் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட்டுடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து தொடர்ந்தார். ஜோ ரூட் தனது கிளாசான இன்னிங்ஸை தொடர, பென் ஸ்டோக்ஸ் அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்து அரைசதம் அடித்தார். 2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசன் முழுவதும் விக்கெட்டே விழவில்லை. 2வது செசன் தொடங்கிய சில நிமிடத்தில் ஷபாஸ் நதீமின் பந்தில் தூக்கியடித்து புஜாராவிடம் கேட்ச் கொடுத்து 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
undefined
தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜோ ரூட் இரட்டை சதமடித்தார். ஜோ ரூட்டுடன் ஆலி போப் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 4 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 450 ரன்களை கடந்து ஆடிவருகிறது. ஜோ ரூட் இன்னும் களத்தில் நிற்கிறார்; போப், பட்லர் என பேட்ஸ்மேன்கள் இன்னும் இருப்பதால், இங்கிலாந்து மெகா ஸ்கோரை அடிப்பது உறுதி. இந்திய பவுலர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியாமல் போராடிவருகின்றனர்.
undefined
click me!