Ind Vs NZ: மண்ட பத்திரம் பிகிலு.. அகமதாபாத் பிட்ச்.. கப் அடிக்குமா இந்தியா..?

Published : Mar 07, 2026, 08:17 AM IST

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில் பிட்ச் தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்வோம்.

PREV
14
டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய திருவிழாவான டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. தற்போதைய சாம்பியனான இந்திய அணி, மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

24
பிட்ச் எப்படி இருக்கு..?

அசுர கொள்ளளவு: சுமார் 1,32,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட இந்த மைதானம், நாளை ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிரப்போகிறது. பாரம்பரிய விளக்கு கோபுரங்களுக்குப் பதிலாக, மைதானத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள LED ரிங் விளக்குகள் நிழல் விழாத வெளிச்சத்தைத் தரும்.

ஆடுகளம்: இங்குள்ள 11 ஆடுகளங்களில் சிவப்பு மற்றும் கருப்பு மண் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிற்கும் சமமான வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிட்ச் சீமர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இறுதிப் போட்டியில் அதிகமான பவுன்சர்களை எதிர்பார்க்கலாம். மேலும் இந்த பிட்ச் ஸ்பின்னர்களுக்கு பெரிய அளவில் கைகொடுக்காது என்று சொல்லப்படுகிறது.

34
இரு அணிகளின் பயணம்

இந்தியா: சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. குறிப்பாக சஞ்சு சாம்சன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் அதிரடி ஆட்டம் அணிக்கு பெரும் பலமாக உள்ளது.

நியூசிலாந்து: மற்றொரு அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து மிரட்டியது. ஃபின் ஆலன் (33 பந்துகளில் 100 ரன்கள்) மற்றும் டிம் சீஃபர்ட் ஆகியோரின் ஃபார்ம் இந்தியாவிற்கு சவாலாக இருக்கும்.

44
முக்கிய தகவல்கள்

போட்டி நேரம்: நாளை மாலை 7:00 மணி (டாஸ் மாலை 6:30 மணிக்கு).

நிகழ்ச்சிகள்: இறுதிப் போட்டிக்கு முன்னதாக மாலை 5:30 மணிக்கு சர்வதேச பாப் ஸ்டார் ரிக்கி மார்ட்டின் பங்கேற்கும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

சாதனை வாய்ப்பு: இந்தியா வெற்றி பெற்றால், மூன்று முறை டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் அணி என்ற வரலாற்றைப் படைக்கும். நியூசிலாந்து தனது முதல் டி20 உலகக்கோப்பை மகுடத்திற்காகக் காத்திருக்கிறது.

ரசிகர்களுக்கான ஏற்பாடுகள்

போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்காக மும்பை - அகமதாபாத் இடையே சிறப்பு தேஜஸ் ரயில்களை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், மைதானத்தைச் சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் மெட்ரோ ரயில் வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories