Asia Cup: ஓவராக ஆட்டம் போட்ட பாகிஸ்தான்..! ஆப்பு வச்ச ஐசிசி..! அதிரடி நடவடிக்கை!

Published : Sep 19, 2025, 04:03 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விதிகளை மீறி ஆட்டம் போட்ட பாகிஸ்தானுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடுவர் ஆன்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் கேப்டனிடம் மன்னிப்பு கேட்கவில்லை எனவும் தெளிவுப்படுத்தியுள்ளது.

PREV
14
ஆசிய கோப்பை 2025

ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காத நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கப் போவதாக மிரட்டல் விடுத்த சம்பவத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக ஐசிசி (ICC) கடும் நடவடிக்கை எடுக்க உள்ளது. போட்டியின் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது பல பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரியவந்துள்ளது. 

24
ஆட்டம் போட்ட பாகிஸ்தான்

நடப்பு தொடரில் பலமுறை நடத்தை விதிகளை மீறியதாக ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி சன்ஜோக் குப்தா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் மின்னஞ்சல் மூலம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியின் போது, வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் குறித்து பலமுறை எச்சரித்தும், பாகிஸ்தான் அணி நடத்தை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் ஐசிசி தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

விதிகளை மீறி அட்டூழியம்

ஐக்கிய அரபு அமீரக போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸனை போட்டி நடுவர் ஆன்டி பைக்ராஃப்ட் சந்தித்தார். இந்த சந்திப்பை வீடியோ எடுக்க வேண்டாம் என எச்சரித்தும், பாகிஸ்தானின் ஊடக மேலாளர் அதை கேமராவில் பதிவு செய்து, ஆன்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்டதாகக் கூறி அந்தப் படங்களையும் வீடியோவையும் சமூக ஊடகங்களில் பரப்பினார்.

34
பாகிஸ்தானின் நாடகம்

இந்தியா, பாகிஸ்தான் போட்டியின்போது இந்திய அணியுடன் கைகுலுக்க வேண்டாம் என நடுவர் ஆன்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் கேப்டனிடம் கூறியதாகவும் இதனால் ஆன்டி பைக்ராஃப்ட்டை நீக்கும் வரை ஆசிய கோப்பையில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்தது. ஆனால் நடுவரை மாற்ற முடியாது என ஐசிசி திட்டவட்டமாக கூறியது. இதனல் யுஏஇக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் நாடகமாடியது.

44
உண்மையை சொன்ன ஐசிசி

இதனைத் தொடர்ந்து ஆன்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் கேப்டனிடம் மன்னிப்பு கேட்டதால், தாமதமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக விளையாட பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்தது. 

ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது டாஸ் சமயத்தில் ஏற்பட்ட தவறான புரிதல் மற்றும் தகவல் தொடர்பு சிக்கலைத் தீர்ப்பதற்காகவே ஆன்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் அணியைச் சந்தித்ததாக ஐசிசி கூறுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கூறுவது போல் மன்னிப்பு கேட்பதற்காக அவர் சந்திக்கவில்லை என்று ஐசிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories