இந்த விஷயத்தில் ஐசிசி ஏற்கனவே தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளது. "தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டிகளில் மட்டும் விளையாடுவது உலகளாவிய விளையாட்டுப் போட்டியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது" என்று ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. தொடரின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் இத்தகைய நகர்வுகளை தீவிரமாகப் பார்ப்பதாகவும் ஐசிசி எச்சரித்துள்ளது.
வங்கதேசமே மூல காரணம்
வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல்-இல் இருந்து நீக்க பிசிசிஐ அறிவுறுத்தியதே இந்த பிரச்சனைகளின் தொடக்கம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசம் தொடரில் இருந்து விலகியது. வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவித்து, பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்க முடிவு செய்தது.
தற்போது பாகிஸ்தான் அணி தொடரின் மற்ற போட்டிகளுக்காக கொழும்புவிற்குப் புறப்பட்டுள்ளது. ஆனால், பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அவர்கள் விளையாடுவார்களா அல்லது இந்தியாவிற்கு 'வாக்கோவர்' கிடைக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.