டாஸ் வென்று முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி சொதப்பல்
பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட் செய்தது. 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். சஷாங்க் சிங் 18, ஜேவியர் பார்ட்லெட் 11, நெஹால் வதேரா 10 ரன்கள் எடுத்தனர்.