6 மாதமாக மதுபானத்தை தொடாத இந்திய வீரர்.. மீண்டும் அணிக்கு திரும்புவேன் என சபதம்!

Published : Mar 19, 2026, 09:04 PM IST

ஐபிஎல் 2026 சீசனுக்காக தீவிரமாக தயாராகி வரும் இந்திய லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹால், ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கிறார். ஃபிட்னஸ் மற்றும் ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்துவதற்காக, அவர் மது அருந்துவதை முழுவதுமாக நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளார். 

PREV
16
ஏபி டிவில்லியர்ஸுடன் சஹால் மனம்திறந்த பேச்சு

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் யுஸ்வேந்திர சஹால், ஏபி டிவில்லியர்ஸின் பாட்காஸ்ட் ஒன்றில் தனது வாழ்க்கை முறையில் செய்துள்ள இந்த மாற்றம் குறித்துப் பேசியுள்ளார். சஹால், கடந்த ஆறு மாதங்களாக ஆல்கஹால் தொடுவதே இல்லை என்று கூறியுள்ளார்.

26
ஆறு மாதங்களாக ஆல்கஹால் தொடாத சஹால்

 "எனக்கு இப்போது 35 வயதாகிறது. நான் இன்னும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும், அணிக்காக என் 150% உழைப்பைக் கொடுக்க வேண்டும். ஒரு சீனியர் வீரராக, இளம் வீரர்களுக்கு நான் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்" என்று தனது இலக்கைத் தெரிவித்துள்ளார்.

36
விலா எலும்பு முறிவால் பாதிக்கப்பட்ட யுஸி
2025 சீசனில் தனது ஆட்டத்தில் திருப்தி இல்லை என்பதை சஹால் ஒப்புக்கொண்டார். கடந்த சீசனில் காயம் அவரை மிகவும் பாதித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, அவரது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. பின்னர் விரலிலும் காயம் ஏற்பட்டது.
46
கடந்த ஐபிஎல் சீசனில் காயமடைந்த சஹால்
இந்தக் காயம் காரணமாக, 2025 ஐபிஎல் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் சஹாலால் தனது வழக்கமான லெக் ஸ்பின் பந்துவீச்சை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. இந்த முறை, தனது உடலுக்கு முதல் முன்னுரிமை அளித்து, முழு ஃபிட்னஸுடன் விளையாடப் போவதாக அவர் கூறியுள்ளார்.
56
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கோப்பை வெல்லும் இலக்கு
கடந்த சீசனில் சஹால் 14 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்தது. இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்து கோப்பையை வெல்ல வேண்டும் என்பது சஹாலின் பெரிய இலக்காக உள்ளது.
66
டீம் இந்தியாவுக்கு கம்பேக் கொடுக்க காத்திருக்கும் சஹால்
2023-க்கு பிறகு சஹாலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடி, மீண்டும் தேசிய அணிக்கு திரும்பும் முனைப்பில் இருக்கிறார். தற்போது இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் முக்கிய ஸ்பின்னர்களாக உள்ளனர்.
Read more Photos on
click me!

Recommended Stories