ஐபிஎல் 2020: சிஎஸ்கே தான் கோப்பையை வெல்லும்.. பிரெட் லீ அதிரடி

First Published Sep 18, 2020, 6:08 PM IST

ஐபிஎல் 13வது சீசனில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி தான் கோப்பையை வெல்லும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் நாளை(சனிக்கிழமை) தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் 4 முறை டைட்டிலை வென்ற நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும் 3 முறை சாம்பியனான சிஎஸ்கேவும் மோதுகின்றன.
undefined
இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் அதன் நட்சத்திர வீரர்கள் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆடவில்லை. அனுபவ வீரர்களான அவர்கள் இருவரும் ஆடாதது, அந்த அணி பெரும் பாதிப்புதான். ஆனாலும் இந்த சீசனில் சிஎஸ்கே அணி தான் கோப்பையை வெல்லும் என்று பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
undefined
இந்த சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. அமீரக ஆடுகளங்கள் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும். அந்தவகையில், ஜடேஜா, பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், மிட்செல் சாண்ட்னெர் என பெரும் ஸ்பின் படையையே வைத்திருக்கும் சிஎஸ்கேவிற்கு இந்த சீசன் சிறப்பானதாக அமையும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.
undefined
அதே காரணத்தை சுட்டிக்காட்டித்தான், பிரெட் லீயும் சிஎஸ்கே தான் கோப்பையை வெல்லும் என தெரிவித்துள்ளார்.
undefined
சிஎஸ்கே குறித்து பேசியுள்ள பிரெட் லீ, சிஎஸ்கே தான் இந்த சீசனில் டைட்டிலை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. சாண்ட்னெர், ஜடேஜா, தாஹிர் என நல்ல கலவையிலான சிறந்த ஸ்பின் பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பதால், அமீரக கண்டிஷனில் சிஎஸ்கே அணிக்கான வாய்ப்பு அதிகம் என்று பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
undefined
ஐபிஎல்லில் 2 முறை கேகேஆர் அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்த, ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர் மற்றும் கேப்டனான கம்பீர், பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் அணிகளாக தான் தேர்வு செய்த 4 அணிகளில் சிஎஸ்கேவை புறக்கணித்திருந்த நிலையில், பிரெட் லீ, சிஎஸ்கே தான் கோப்பையை வெல்லும் என தெரிவித்துள்ளார்.
undefined
click me!