ஐபிஎல் 2020: இந்த 4 அணிகள் தான் பிளே ஆஃபிற்கு தகுதிபெறும்.. கம்பீர் அதிரடி

First Published Sep 18, 2020, 4:35 PM IST

ஐபிஎல் 13வது சீசனில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் என்று ஐபிஎல்லில் 2 முறை கோப்பையை வென்ற வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான கவுதம் கம்பீர் ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் நாளை(சனிக்கிழமை) தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. வழக்கம்போலவே ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.
undefined
இந்நிலையில், இந்த சீசனில் எந்த 4 அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் முதல் அணியாக 4 முறை கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸை தேர்வு செய்துள்ளார்.
undefined
2வது அணியாக டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கம்பீர் தேர்வு செய்துள்ளார்.
undefined
3வது அணியாக கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை தேர்வு செய்துள்ளார் கம்பீர்.
undefined
பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் 4வது அணியாக டெல்லி கேபிடள்ஸ் அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகளில் ஒன்று இருக்கும் என தெரிவித்துள்ளார்.
undefined
சிஎஸ்கே அணி ஆடும் லெவன் காம்பினேஷனை எவ்வாறு தேர்வு செய்யப்போகிறது என்பது ஃப்ளெமிங் மற்றும் தோனியின் கையில் தான் உள்ளது. சாம் கரன்ஜடேஜா மற்றும் பிராவோஇம்ரான் தாஹிர் இந்த இரண்டு காம்பினேஷனில் யாரை எடுப்பார்கள், யாரை நீக்குவார்கள் என்று பார்ப்போம் என்று டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
undefined
click me!