சூர்யகுமார் யாதவுக்கு குட் நியூஸ் சொன்ன தாதா..!

First Published Nov 6, 2020, 5:53 PM IST

சூர்யகுமார் யாதவுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியுள்ளார்.
 

ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியும் கூட, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவுக்கு இடம் கிடைக்காதது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
undefined
ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி தொடர் என உள்நாட்டு தொடர்கள் அனைத்திலும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்துவரும் சூர்யகுமார் யாதவ், ஐபிஎல்லிலும் ஸ்கோர் செய்கிறார். கடந்த ஐபிஎல் சீசனில் 424 ரன்களையும், 2018 ஐபிஎல் சீசனில் 512 ரன்களையும் குவித்த சூர்யகுமார் யாதவ், இந்த சீசனில், மும்பை இந்தியன்ஸுக்கு இன்னும் ஒரு போட்டி(ஃபைனல்) எஞ்சியுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் இதுவரை 461 ரன்களை குவித்துள்ளார்.
undefined
தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியபோதிலும், அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டுவருகிறது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சூர்யகுமார் யாதவ் அவருக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.
undefined
இந்நிலையில், சூர்யகுமார் யாதவுக்கான வாய்ப்பு குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
undefined
இதுகுறித்து பேசிய கங்குலி, சூர்யகுமார் யாதவ் மிகச்சிறந்த வீரர். அவருக்கான நேரம் வரும் என்று தெரிவித்துள்ளார்.
undefined
click me!