ஐபிஎல் 2021: 2 எக்ஸ்ட்ரா அணிகள் இந்த ஊர்களை சார்ந்தவை தான்..! பிசிசிஐ-யின் அதிரடி திட்டம்

First Published Dec 5, 2020, 6:07 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் இறங்கவுள்ள 2 கூடுதல் அணிகள் எந்தெந்த ஊர்களை அடிப்படையாக கொண்டவை என்று பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. கொரோனாவால் 13வது சீசன் தாமதமாக நடத்தப்பட்டதால், அடுத்த சீசன் 4 மாத இடைவெளியில் தொடங்கப்படும்.
undefined
14வது சீசனில் 2 அணிகளை கூடுதலாக சேர்க்கும் முனைப்பில் உள்ளது பிசிசிஐ. ஏற்கனவே 8 அணிகள் இருக்கும் நிலையில், கூடுதலாக 2 அணிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டு, ஐபிஎல்லில் சேர்க்கப்படவுள்ளது. கூடுதல் அணிகள் சேர்க்கப்படுவதால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.
undefined
ஐபிஎல் அணிகள் சில எதிர்ப்பு தெரிவித்தாலும், கூடுதலாக 2 அணிகளை சேர்ப்பதில் உறுதியாக இருக்கும் பிசிசிஐ, இதுகுறித்து டிசம்பர் 24ம் தேதி நடக்கும் பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
undefined
உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான சர்தார் படேல் ஸ்டேடியத்தை ஹோம் கிரவுண்டாக கொண்ட, அந்த மைதானம் அமைந்துள்ள அகமதாபாத்தை அடிப்படையாக கொண்ட ஒரு அணியும், மற்றொரு அணி கான்பூர் அல்லது லக்னோ அணியாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
click me!