முன்னதாக, வீரர்களின் பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி, 2026 ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து மாற்று இடங்களுக்கு மாற்றுமாறு ஐசிசிக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. வங்கதேச வீரர் ஐபிஎல்லில் விளையாடக்கூடாது என்பது குறித்து பிசிசிஐ எடுத்தது சரியான முடிவு என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் நடந்தது தவறு
இது தொடர்பாக பேசிய ஹர்பஜன் சிங், "கடந்த சில நாட்களில் நடந்த பல்வேறு நிகழ்வுகளால், வங்கதேசம் இந்தியாவுக்கு வர விரும்பவில்லை. வங்கதேசத்தில் நடந்தது தவறு. அவர்களின் கோரிக்கை குறித்து ஐசிசி முடிவு எடுக்க வேண்டும்.
நாங்கள் அனைவரையும் இந்தியாவுக்கு வரவேற்கிறோம். ஆனால் அவர்கள் இங்கு வர விரும்புகிறார்களா இல்லையா என்பது அவர்களின் விருப்பம்'' என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.