ஐபிஎல் 2020: ஆர்சிபி அணிக்கு இந்த சீசனிலும் ஆப்புதான்

First Published Sep 13, 2020, 4:22 PM IST

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், வழக்கம்போலவே இந்த சீசனிலாவது முதல் முறையாக டைட்டிலை வெல்லும் முனைப்பில் உள்ள ஆர்சிபி அணி, இந்த சீசனில் நல்ல பேலன்ஸான, சிறந்த அணியாக உள்ளது என்று கேப்டன் விராட் கோலி கூறியிருந்தார். ஆனால் அந்த அணியில் மிகப்பெரிய பிரச்னை ஒன்று இருப்பதை ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
 

மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகள் ஐபிஎல் கோப்பைகளை வென்று குவித்துக்கொண்டிருக்கும் நிலையில், விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் திணறிவருகிறது.
undefined
விராட் கோலி, டிவில்லியர்ஸ் என்ற இருபெரும் வீரர்களை பெற்றிருந்தும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம், அவர்கள் இருவரை மட்டுமே அதிகமாக சார்ந்திருப்பதுதான்.
undefined
ஆர்சிபி அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் எப்போதுமே மிகச்சிறந்ததாக இருந்ததில்லை. அந்த அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் எப்போதுமே பலவீனமாகவே இருந்துள்ளது. அதனால்தான், அந்த அணி 200க்கும் அதிகமாக ஸ்கோர் செய்தாலும், அதை கட்டுப்படுத்த முடியாமல் பல தருணங்களில் தோற்றது.
undefined
இந்த சீசனில் ஃபின்ச், கிறிஸ் மோரிஸ் ஆகிய வீரர்களை அணியில் எடுத்துள்ள ஆர்சிபி அணி, முன்னெப்போதையும் விட, சிறந்த பேலன்ஸான அணியை பெற்றுள்ளதாக கருதுகிறது.
undefined
ஆனாலும் இன்னும் அந்த அணியில் தரமான டெத் பவுலர் ஒருவர் இல்லையென்ற எதார்த்தத்தை சுட்டிக்காட்டி, அதுதான் அந்த அணியின் பெரிய பிரச்னை என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
undefined
ஆர்சிபி அணியின் பிரச்னைகளை சுட்டிக்காட்டி தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, ஆர்சிபி அணி விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரையுமே பெரியளவில் சார்ந்திருக்கிறது. கோலியும் டிவில்லியர்ஸும் சிறப்பாக ஆடினால் அந்த அணிக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அவர்கள் சோபிக்காத பட்சத்தில், அந்த அணியில் சரியான மிடில் ஆர்டர்கள் இல்லாமல் இருந்தனர். ஆனால் தற்போது மொயின் அலி, ஷிவம் துபே, கிறிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இருப்பதால், மிடில் ஆர்டர் சிக்கல் ஓரளவிற்கு சரியாகியுள்ளது.
undefined
ஆனால் தரமான டெத் பவுலர்கள் இல்லாத குறை இன்னும் குறையாகவே உள்ளது. கிறிஸ் மோரிஸ், டேல் ஸ்டெய்ன் ஆகியோரெல்லாம் மிகச்சிறந்த டெத் பவுலர்கள் கிடையாது. உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோரும் டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவர்கள் அல்ல என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
undefined
மும்பை இந்தியன்ஸ் அணியில், மலிங்கா, பும்ரா ஆகியோரும் டெல்லி அணியில் ரபாடா, சிஎஸ்கேவில் தீபக் சாஹர் போன்ற பவுலர்கள் இருப்பதை போல ஆர்சிபியில் தரமான டெத் பவுலர் இல்லை என்பது எதார்த்தம்.
undefined
ஆர்சிபி அணி வீரர்கள்:விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(பேட்ஸ்மேன்), தேவ்தத் படிக்கல்(பேட்ஸ்மேன்), குர்கீரத் சிங்(பேட்ஸ்மேன்), மொயின் அலி(ஆல்ரவுண்டர்), முகமது சிராஜ்(ஃபாஸ்ட் பவுலர்), நவ்தீப் சைனி(ஃபாஸ்ட் பவுலர்), பார்த்திவ் படேல்(விக்கெட் கீப்பர்), பவன் நேகி(ஆல்ரவுண்டர்), ஷிவம் துபே(ஆல்ரவுண்டர்), உமேஷ் யாதவ்(ஃபாஸ்ட் பவுலர்), வாஷிங்டன் சுந்தர்(ஆல்ரவுண்டர்), சாஹல்(ஸ்பின்னர்), கிறிஸ் மோரிஸ்(தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர்), ஆரோன் ஃபின்ச்(ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன்), கேன் ரிச்சர்ட்ஸன்(ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர்), டேல் ஸ்டெய்ன்(தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர்), இசுரு உடானா(இலங்கை ஆல்ரவுண்டர்), ஷேபாஸ் அகமது(விக்கெட் கீப்பர்), ஜோஷுவா ஃபிலிப்(ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர்), பவன் தேஷ்பாண்டே(ஆல்ரவுண்டர்).
undefined
click me!