சனிக்கிழமை மகாவிஷ்ணுவுக்கு விரதம் இருப்பவர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். சனி கிரகத்தினால் உண்டாகும் பிரச்சனைகளை கூட விஷ்ணு விரதம் நிவர்த்தி செய்யும். சனி அன்று விரதம் இருப்பவர்கள் எல்லா செல்வமும் பெற்று வளமாக வாழ்வார்கள்.
எப்படி விரதம் இருக்க வேண்டும்?
நீங்கள் சனிக்கிழமை விரதம் இருக்கும்போது பகலில் பழச்சாறு, தண்ணீர் ஆகியவை குடிக்கலாம். வயிறார உணவு சாப்பிடக் கூடாது. மனமுருகி அன்றைய தினம் விஷ்ணுவை வேண்டி கொள்ள வேண்டும். மாலை வேளையில் விஷ்ணு பகவானின் ஆலயம் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். திருமாலை வணங்கிய பிறகு இரவுக்கு சாப்பாடு எடுக்கலாம். அப்படியே விரதத்தை நிறைவு செய்யலாம்.