வலம்புரி சங்கு எப்படி பயன்படுத்த வேண்டும்?
வலம்புரி சங்கில் வெள்ளி அல்லது தங்க நாணயத்தை வைக்க வேண்டும். இதனுடன் அதர்வண தெய்வ குங்குமத்தை வைக்க வேண்டும். இங்கு அதர்வண தெய்வம் என்றால் வராஹி அம்மன், காளியம்மன் போன்ற உக்ரமான தெய்வங்களை சொல்லும் பதமாகும். குங்குமம் இட்ட பின்னர் சங்கை மூடும் அளவில் பிசைந்த மண்ணை பூசி வைக்க வேண்டும்.
அடுத்து நம் வீட்டுக்கு வெளியே (சுற்றுசுவருக்குள்) வடகிழக்கு மூலையில் 2 அடி அகலமும், 2 அடி ஆழமும் இருக்குமாறு ஒரு குழியை பறித்து கொள்ளுங்கள். அங்கு நாம் மூடி வைத்துள்ள சங்கை புதைக்க வேண்டும். இப்படி சொந்த நிலமோ, வீட்டிக்கு வெளியே குழியோ தோண்ட முடியாத நபர்கள், அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்கள் செப்பு பாக்ஸ், மண்பானை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை ஏற்பாடு செய்து சங்கை போட்டு மூடி, வீட்டினுள் வடகிழக்கு மூலையில் வைத்தால் போதும்.