இந்து சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு சடங்கிற்கு முன்பும் விளக்கு ஏற்றுவது முக்கிய அங்கம். பூஜைகள் முடிந்த பிறகு இறைவனுக்கு ஆரத்தி எடுப்பதும் வழக்கம். இவை செய்யாமல் அந்த வழிபாடு நிறைவடையாது என நம்பப்படுகிறது. நாம் விளக்கில் ஒளி ஏற்றும்போது தேவர்களும் இறைவனும் மனம் குளிர்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. நம் பிரார்த்தனையின் போது தெய்வங்கள் மகிழ விளக்கு ஏற்றும் போது கவனமாக இருக்க வேண்டும். அதற்கு உதவியாக விளக்கேற்றும் போது செய்யக்கூடாத தவறுகளை இங்கு காணலாம்.