வாசல் எண்ணிக்கை:
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டில் இரண்டு வாசல் வைத்து கட்டுவார்கள். நிறைய ஜன்னல்கள் அமைப்பார்கள். இதனால் வீட்டில் உள்ள வாயு வெளியே செல்லவும், வெளியில் இருந்து காற்று உள்ளே வரவும் வசதியாக இருந்தது. வீட்டின் ஆரோக்கியம் சீராகவும், செல்வ வளமும் செழிப்பாக காணப்பட்டது. குறிப்பாக, முன் வாசலுக்கு நேராக பின் வாசல் அமைந்திருப்பது நல்ல பலன்களை தரும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது மாதிரியான வீடுகள் குறைந்து விட்டன.