தெற்கு திசை நோக்கிய நிலத்தில் வீட்டை கட்டியெழுப்பும்போது தெற்கு திசையை விட அதிகமாக வடக்கு பக்கம் திறந்த வெளியாக இருக்க வேண்டும். இங்கு கனமான பொருள்களை வைக்கக் கூடாது. மேற்கை விட கிழக்கு திசையில் திறந்த வெளியை அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். இதனால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பணமும் நன்கு புழங்கும்.
இதையும் படிங்க: நெற்றியில் திருநீறு வைத்தால் இத்தனை நன்மைகளும் கிடைக்குமா? உண்மையான பின்னணி என்ன தெரியுமா?
தெற்கு நோக்கிய வீட்டில் வடகிழக்கு மூலையில் எந்த சேதாரமும் ஏற்படாமல் இருக்க வேண்டும். இந்த பகுதியில் விரிசல், பிளவுகள் போன்ற எதுவும் ஏற்படக் கூடாது. தென்மேற்கு மூலை உயரம் அல்லது பள்ளமாக இருக்கக் கூடாது. இவை இருந்தால் வாஸ்து தோஷம் ஏற்படும்.