காலணி அடுக்கு:
சனிபகவானின் மோசமான தாக்கம் ஏற்படாமல் இருக்க வீட்டில் செருப்பு, ஷூ ஆகியவற்றை ஆங்காங்கே சிதறி கிடக்காமல் அடுக்கி வைக்க வேண்டும். நம்முடைய பாதத்துடன் தொடர்புடைய பொருட்கள் சனிபகவானுடனும் தொடர்பு கொண்டுள்ளது. ஆகவே வீட்டில் அறுந்து போன செருப்பு, பயன்படுத்தாத காலணிகள் இருந்தால் அவற்றை அவ்வப்போது அகற்றி விட வேண்டும். வீட்டிற்கு முன்பாக செருப்பு சிதறி கிடக்காமல் ஒழுங்காக அடுக்கி வைத்திருந்தால் மட்டுமே வீட்டிற்கு பொருளாதார பிரச்சனைகள் ஏற்படாது. இதைப் பின்பற்ற தவறினால் வீட்டில் உள்ள பொருளாதார நிலை பாதிப்புக்கு உள்ளாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியிலும் பிரச்சனைகள் ஏற்படலாம்.