குபேரன் அனுகிரகம்:
வீட்டில் நடு வடக்கு நன்றாக இருந்தால் தான் பணம் வற்றாமல் கிடைக்கும். எப்போதும் பண பற்றாக்குறையின்றி வளமாக கிடைக்க வீட்டின் நடு வடக்கு திசையில் இடையூறே இருக்க கூடாது. குறிப்பாக இந்த திசையில் சமையலறை, படிக்கட்டு வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் பணம் வராமல் போய்விடும். குபேரன் பார்வை விழும் அந்த பகுதியை தெளிவாக வைக்க வேண்டும். அங்கு ஏதேனும் பொருள்களால் இடையூறு வந்தால் தெளிவாக விழும் பகுதி அதுதான். அந்த பகுதி அடைபட்டால் வீட்டிற்கு பணம் வருவது தடைபடும். அதைப் போலவே வீட்டின் ஈசான்யம் என்னும் வடகிழக்கு மூலைப்பகுதியில் வெளிச்சமும், காற்றும் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். ஏனென்றால் இந்த திசை அதிர்ஷ்டம் தரும் திசை. இங்கு படிக்கட்டு வேறு ஏதேனும் பொருள்களை வைக்க வேண்டாம். தென்மேற்கு மூலையில் ஒருபோதும் வாசல் வைக்காதீர்கள்.