வீட்டில் பண விரயமாக காரணங்கள்..
• ஆண்கள் வீட்டில் விளக்கேற்றினால் பணம் விரயமாகிவிடும் என சொல்லப்படுகிறது.
• வீட்டு குழாய்களில் நீர் சொட்டிக் கொண்டே இருக்கக் கூடாது. அப்படி செய்தால் வீட்டு செல்வமும் அப்படியே கரையும் என்பது ஐதிகம்.
• ஈரத்துணிகள் உடனே காய போட வேண்டும். ரொம்ப நேரம் ஈரமாக போட்டு வைக்கக் கூடாது.
• வீட்டை வெளிச்சம் இல்லாமல் இருளாக போடுவது செல்வத்தை குறைக்கும். பகலில் ஜன்னல்களை திறந்து வெளிச்சத்தை அனுமதியுங்கள். இரவில் மின்சாரம் சேமிக்க இருளாக வைத்தால் தரித்தரம் வந்து சேரும்.
• வீட்டில் அதிக குப்பைகளும் ஒட்டடையும் அடைந்து கிடப்பது. வீட்டில் தேவையில்லாத பொருள்களை குவித்து வைப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்.
• சூரிய மறைந்த பின் வீட்டை சுத்தம் செய்வது, துடைப்பது பண விரயத்தை தூண்டும். இவை தவிர வீட்டின் திசைகள் பணம் விரயமாக காரணமாக இருக்கும்.