விநாயகர் மற்றும் லட்சுமி இவை இரண்டு பேரும் ஒருசேர இருக்கும் புகைப்படம் அல்லது ஏதாவது ஒரு பரிசு பொருட்களை மற்றவர்களுக்கு பரிசளிக்க கூடாது. இருவரும் ஒன்றாக இணைந்த இடத்தில் ஐஸ்வர்யம் நிறைந்திருக்கும். எனவே ஐஸ்வரியம் நிறைந்த பொருட்களை மற்றவர்களிடம் பரிசாக கொடுக்கும் பொழுது உங்களுடைய அதிர்ஷ்டமும் அவர்களுக்கு சென்று விடுவதாக ஒரு நம்பிக்கை உண்டு.
அதேபோன்று, உப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை மற்றவர்களுக்கு தானமாகவோ அல்லது பரிசாகவோ கொடுக்கக் கூடாது. இதுவும் மகாலட்சுமியின் அருளை தடை செய்கிறது.