* கருத்தரிக்க வேண்டுவோர் கருவளர்ச்சேரிக்கு செல்ல வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் பாக்கியம் உண்டாகும்.
* கருத்தரித்த பின் அது நன்கு வளர்ந்து சுகப்பிரசவம் கிடைக்க வேண்டுவோர் திருக்கருக்காவூர் செல்ல வேண்டும்.
* யாரெல்லாம் நோயில்லா வாழ்வு வேண்டும் என நினைக்கிறார்களோ அவர் செல்ல வேண்டிய கோயில், வைத்தீஸ்வரன் கோயில். இங்கு வழிபட்டால் நோய் நொடிகள் தீண்டாது.
* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞானம் பெற சுவாமிமலையில் தரிசனம் செய்ய வேண்டும்.
* படிக்கும் குழந்தைகள் கல்வி, கலைகளில் வளர்ச்சி பெற்று வர கூத்தனூர் சென்று வழிபட வேண்டும்.