தீபாவளி அன்று இந்த 2 பொருளையும் வாங்கி வைத்திருந்தால் போதும், இந்த வருடம் முழுவதும் நமக்கு பண மழை பொழியும்..!

First Published Oct 23, 2022, 8:02 AM IST

Mangalam tharum porul in Tamil: இந்த இரண்டு மங்கள பொருட்களையும் வாங்கி வீட்டில் வைத்திருக்க வேண்டும். அவை என்னென்ன என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்ப்போம். 

தீபங்களின் திருவிழாவான தீபாவளி பண்டிகை, இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 24, 2022 அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான பண்டிகையாகும். தீபத்திருவிழாவில், எங்கும் தீபம் ஏற்றி,  இனிப்பு பலகாரம் செய்து, சிறுவர்களுக்கும் சரி பெரியவர்கள் சரி பட்டாசு வெடித்து கொண்டாடுவர்.

மேலும் படிக்க...Diwali 2022: தீபாவளி நாளில் விளக்கேற்றும் போதும், விளக்கேற்றிய பிறகும் கவனிக்க வேண்டியவை என்னென்ன..?

இந்த நாளை மேலும் நல்ல நாளாக மாற்ற வாங்க வேண்டிய இரண்டு மங்கள பொருட்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டும். அவை என்னென்ன என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்ப்போம். 

தீபாவளி அன்று எழுந்ததும் முதலில் எண்ணெய் குளியல் அது மிக மிக அவசியம். ஆம், காலையில் எழுந்ததும், முதலில் எண்ணையும், சீக்காயும் வைத்து தேய்த்து இளம் சூடான தண்ணீரில் குளிக்க வேண்டும்.இது தீபாவளி அன்று காலையில் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்றாகும். 

அதேபோன்று, புத்தாடை உடுத்தும் போது கண்டிப்பாக மஞ்சள் வைத்து அணிய வேண்டும். அதே போல விருப்பமான பலகாரங்கள் செய்து, இறைவனை தொழுது வழிபட்டு உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து உண்டு மகிழ வேண்டும். 

மேலும் படிக்க...Diwali 2022: தீபாவளி நாளில் விளக்கேற்றும் போதும், விளக்கேற்றிய பிறகும் கவனிக்க வேண்டியவை என்னென்ன..?

அதேபோன்று, தீபாவளி அன்று காலையில் முதல் செலவாக உப்பும், மஞ்சளும் புதிதாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் விளக்கேற்றும் போது, பூஜை அறையில் இந்த மஞ்சளும் உப்பும் வைத்து இருக்க வேண்டும். உப்பில் மகாலட்சுமி வாசம் செய்வது அனைவரும் அறிந்த ஒன்றே, மஞ்சளும் அதே போல தான் பல மங்களகரமான விஷயங்களுக்கு முதல் துவக்கமே இந்த மஞ்சள் தான். இந்த நாளில் வீட்டில் மங்கலமும் செல்வமும் நிறைந்து இருக்க இந்த இரண்டு பொருள்களை வாங்கி வைத்து வணங்கி கொள்ளுங்கள்.

நீங்கள் இந்த நாளில் செல்வம் பபெருக பணம் நகை வாங்குவதை விட, சிறந்தது இந்த உப்பும், மஞ்சளும். மகாலட்சுமி தாயார் வாசம் செய்யும் இந்த பொருளை நாம் வாங்கி வைத்து வணங்குவது இந்த நாளில் கிடைக்கும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் எல்லா நாளும் நமக்கு கிடைக்க இறைவன் அருள் தருவார் என்பது நம்பிக்கை.

click me!