ஆண்டின் குளிர் காலமான கார்த்திகை மாதத்தில் அதிக இருளும் மூட்டமும் காணப்படும். எங்கும் தெரியும் ஒளி இல்லாத சூழலில், விளக்குகள் ஏற்றி கிராமத்திற்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் இந்த மரபு உருவானது.
பவுத்த ஞானிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு
முன்பொரு காலத்தில், மலாடபுரம் எனப்படும் பகுதியில் வாழ்ந்த புத்த மதத்தினர், ஆமணக்கு விதையிலிருந்து எண்ணெயை எடுத்து, மண் பானைகளில் பிரகாசமான தீபங்களை ஏற்றினர். இதனால்
ஒளி அதிக அளவில் கிடைத்தது
பூச்சிகள் அருகில் வரவில்லை
தீபம் நீண்ட நேரம் எரிந்தது
முதல் நாள் வீட்டு வாசலில், மறுநாள் முற்றத்தில், பின்னர் வீட்டினுள்ளும் தீபம் வைத்தனர். இதனால் தீபமே ஒரு வீட்டின் பாதுகாப்பை சுட்டிக்காட்டும் சின்னமாக மாறியது.