சிவபெருமானின் அழைப்பு தான் என்னை இங்கு அழைத்து வந்துள்ளது என்றார். இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் தமிழ்நாடு தான். திருவண்ணாமலை கிரிவலப்பாதை அசைவ உணவுகளுக்கான இடம் இல்லை. அசைவம் சாப்பிடுவர்கள் வேறு எங்கு வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாம். இதனை தடுக்க என்னால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார். இதனையடுத்து, சாதுக்கள் மற்றும் ஆன்மிக குருக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உணவு பரிமாறினார்.