கடந்த சில மாதங்களாக கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள கோபுரத்தின் முதல் நிலை மற்றம் இரண்டாம் நிலை சுவர்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை 1.50 மணியளவில் கிழக்கு வாசல் நுழைவு வாயிலில் கோபுரத்தின் முதல் சுவர் மளமளவென இடிந்து விழுந்தது. இதில், இருந்த சிற்பங்கள் சிதிலமடைந்தது. நள்ளிரவு நேரத்தில் விபத்து நடந்ததால், எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.