Spiritual: வீடு கட்டுவதற்கு மரம் வெட்டுகிறீர்களா? அதற்கு முன் இதெல்லாம் செய்யனுமாம்!

Published : Nov 25, 2025, 12:09 PM IST

பண்டைய தமிழர்கள் மரங்களை தெய்வ சக்தியாகக் கருதி, வீடு கட்ட மரம் வெட்டுவதற்கு முன் சிறப்பு சடங்குகளைச் செய்தனர். மரம் வெட்டும் நேரம், நிமித்தங்கள், மற்றும் வழிபாடு ஆகியவை வீட்டின் வளத்தையும் அமைதியையும் தீர்மானிப்பதாக நம்பினர். 

PREV
15
மரம் என்பது உயிருள்ள தெய்வ சக்தி

பண்டைய காலத்திலே மரங்கள் சாதாரண தாவரங்களாக அல்ல, உயிருள்ள தெய்வ சக்திகளாகவே கருதப்பட்டன. வீடு கட்டிடத் தேவைக்காக ஒரு மரத்தைத் தேர்வு செய்வதே ஒரு பெரிய சடங்காக இருந்தது. மரம் வெட்டும் நாள், நேரம், நட்சத்திரம் போன்றவை அனைத்தும் வாஸ்து மற்றும் ஆன்மீக அடிப்படையில் மிக முக்கியமானவை என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

25
மரத்தை வணங்குவது அவசியம்

சர்வ அதோமுக நட்சத்திரத்தில் புறப்பட்டு, கந்தம், மலர், தூபம், எள்-வெல்லம் சாதம், பாயசம் போன்ற படையல்களை வைத்து வனதேவதைகளைக் கும்பிட்டு மரத்தை வெட்டத் தொடங்குவது சுபமாகும். மரம் வெட்டும் முன் ஸ்தபதி கிழக்கில் தர்ப்பை விரித்து, கோடரியை வலப்புறத்தில் வைத்தபடி இரவு உறங்க வேண்டும். மறுநாள் கோடரியை பால், நெய், எண்ணெயால் சுத்தம் செய்து, “இந்த மரத்தில் உறைந்திருக்கும் பூத-தேவ சக்திகள் இடம் மாற்றட்டும்; மறுபடி வளரும் சக்தி கிடைக்கட்டும்” என மந்திரத்துடன் பிரார்த்தித்து வெட்ட ஆரம்பிப்பார்.

35
நீர் அதிகமாக கசிந்தால் வீட்டில் வளம் பெருகும்

மரம் வெட்டும்போது சில நிமித்தங்கள் பெரிதாகப் பார்க்கப்படுகின்றன. வெட்டிய இடத்தில் நீர் அதிகமாக கசிந்தால் வீட்டில் வளம் பெருகும். பால் போன்ற நிறத்தில் இருந்தால் குடும்பம் வளம்பெறும். ஆனால் ரத்தத்தை போல் சிவப்பு நீர் வந்தால் அந்த மரத்தை வெட்டக் கூடாது என்ற நம்பிக்கை உண்டு. மேலும், மரம் விழும் சத்தம் சிங்கம், யானை, புலி போன்ற வல்லமை மிகுந்த ஓசையை ஒத்திருக்குமானால் அது மங்களகரமான அறிகுறியாகக் கருதப்படுகிறது. 

45
மரம் வாங்குவதற்கான நல்ல நேரம்

மரம் கிழக்கு அல்லது வடக்கு திசையில் விழுவது நன்மை தரும்; ஆனால் மற்றொரு மரத்தின் மீது விழுந்து அதன் கிளைகள் உடையக் கூடாது. அவ்வாறு நடந்தால் வீட்டில் கவலை, துன்பம், குழந்தைப் பேறு தடை போன்றவை ஏற்படும் என சாஸ்திரங்களின் எச்சரிக்கை. 

தமிழர்கள் மரங்களை தெய்வமாகப் போற்றி வழிபட்ட காலம் இது. மரத்தின் உச்சியில் மருந்துப் பொருட்கள் கலந்த நீரால் அபிஷேகம் செய்து, தங்க ஊசியால் சிறு துளை செய்து, அரிசி மாவு பூசி துணி கட்டி பூமாலை அணிவிக்கப்படும். இந்த விழாவை நடத்தும் நபருக்கும் அபிஷேகம் செய்வதே அந்தக் காலத்தின் தனிச்சிறப்பு. மரத்தை வணங்கிய பின் ஏழைகளுக்கு உணவு வழங்கப்படுவது இந்த சடங்கின் முக்கிய பகுதி. 

இன்று நாம்மது கட்டுமான மரப் பொருட்களை கடைகளில் வாங்கினாலும், பஞ்சமி, சஷ்டி, சப்தமி மற்றும் ரோகிணி நட்சத்திர நாள்களில் வாங்குவது சுபம் என்றும், சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் அல்லது சந்திரன்–சுக்கிரன் குறித்த சில நட்சத்திரங்களில் இருக்கும் போது மரம் வாங்கக் கூடாது என்றும் சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

55
அடிப்படை ஆன்மிக ஞானம்

வீடு என்பது செங்கல், சிமெண்ட், மரம் ஆகியவற்றின் சேர்க்கை அல்ல; அது இயற்கையுடனான ஆன்மீக ஒத்திசைவு. மரத்தை வெட்டும் தருணத்திலிருந்து நீரைத் தேர்வு செய்யும் வரை, ஒவ்வொரு செயலிலும் முன்னோர்கள் நம் வாழ்வின் சக்தி ஓட்டத்தைப் பேணும் ரகசியத்தைப் பதித்துள்ளனர். அந்த அறிவை புரிந்து நடக்கும் போது வீட்டும், வாழ்வும், வளமும், அமைதியும் இயல்பாகவே நம்மை நோக்கி வரும் என பண்டையவர்கள் நம்பினர் — இந்த நம்பிக்கையே தமிழர் மரபின் அடிப்படை ஆன்மிக ஞானம்.

Read more Photos on
click me!

Recommended Stories