சிட்டு குருவிகள் நம் வீட்டில் கூடு கட்டுவது இயல்பாக நடக்கும் விஷயம் தான். அவை வீட்டிற்கு வருவதும் அவற்றின் கீச்சொலியும் மனதிற்கு இதமாக இருக்கும். குருவியின் கீச்சொலிகளை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். இப்படி வீட்டில் பறவைகள் கூடு கட்டினால் மங்களம் உண்டாகும் என ஜோதிடம் கூறுகிறது. அதிலும் சிட்டுக்குருவிகள் நம் வீட்டை தேடி வந்து கூடு கட்டினால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் பெருகும் என்பது ஐதீகம்.