வீட்டில் அமைதியும், செழிப்பும் நிலைக்க வேண்டுமென்றால், நம் முன்னோர்கள் சொல்லி வைத்த சில எளிய ஆன்மிகச் செயல்களை தினசரி வாழ்க்கையில் பழக்கமாக்கிக் கொள்வது மிகுந்த பலனை தரும். அதிக சடங்குகள், செலவுகள் எதுவும் வேண்டாம்; தினமும் சில நிமிடங்கள் செலவிட்டாலே போதும். குடும்பத்தில் சுப பாக்கியம் நிலைத்து, நேர்மை, அமைதி, செல்வம் ஆகியவை தானாகவே பெருகத் தொடங்கும் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.
பறவைகளுக்கும் பசுக்களுக்கும் உணவு வழங்குவது
காலையில் எழுந்ததும் பறவைகள் சாப்பிட தானியங்களை வீட்டின் முன் இடுவது, அருகில் உள்ள பசுவுக்கு பசுந்தழை கொடுப்பது போன்ற கருணை செயல்கள் நம் வாழ்வில் நல்ல அதிர்ஷ்டத்தை வரவேற்கும். இந்த நற்காரியங்கள் வீட்டிலிருந்து வறுமை நீங்கச் செய்வதோடு, நீண்டநாள் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.