Spiritual: துளசி மாலையை யாரெல்லாம் அணியலாம் தெரியுமா? அணிபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள் இதுதான்.!

Published : Nov 14, 2025, 01:20 PM IST

புனிதமான துளசி மாலையை யார் வேண்டுமானாலும் அணியலாம். இது மகிழ்ச்சி, ஆன்மபலம், ஆரோக்கியம் போன்றவற்றை வழங்குவதோடு, பூஜை மற்றும் ஜபம் செய்யும்போது ஆன்மிக சக்தியை அதிகரிக்கிறது. இதை அணிபவர்கள் அதன் புனிதத்தைக் காத்து, செல்வமும் அமைதியும் பெறலாம்.

PREV
15
அருள் தரும் துளசி மாலை

மிகவும் தனித்துமான ஆன்மிக அருளை கொடுக்கும் துளசி மாலையை யாரெல்லாம் அணியலாம் என்ற கேள்வி பலர் மனதில் எப்போதும் எழுந்தவாறே உள்ளது. மிகவும் புனிதமான அந்த துளசிமாலை மகிழ்ச்சி, ஆன்மபலம், நல்ல சிந்தனை, ஆரோக்கியம் உள்ளிட்டவற்றை கொடுக்கும் என்பதால் அதனை எல்லோரும் பயத்துடன் கலந்த மரியாதையுடன் பார்க்கும் நிலையே உள்ளது.

25
துளசி மாலை எல்லோரும் அணியலாமா?

ஆம், துளசி மாலையை எல்லோரும் அணியலாம். படித்தவர்கள், பாமரர்கள், வேதம் அறிந்தவர்கள், அறியாதவர்கள் என அனைத்துத் தரப்பினரும் இதை அணிய முடியும். இது மிகவும் சக்தி வாய்ந்தது என்று கருதப்படுகிறது.

பூஜை வேளைகளில் அருள் தரும்

துளசி மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு பூஜிப்பது விசேஷமானது. ஜபம் செய்யும் போது கையில் வைத்து, விரல்களால் மணிகளை உருட்டியபடி "ஓம் நமோ நாராயணாய" போன்ற நாமங்களை உச்சரிப்பது சிறந்த வழிபாடாகும். இது எளிமையான, அற்புதமான பக்தி முறை.

 எல்லாக் காலங்களிலும் வழிநடத்தும்

பக்தர்கள் துளசி மாலையை எப்போதும் அணிந்திருக்கலாம். இது ஆன்மிக சக்தியை அதிகரிக்கும்.

35
அணிபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள்

துளசி மாலையின் புனிதத்தை காக்க வேண்டியது முக்கியம். வெளியிடங்களில் செல்லும் போது அதன் தூய்மை கெடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அசுத்தமான இடங்கள் அல்லது நடவடிக்கைகளில் இருந்து அதைப் பாதுகாக்க வேண்டும். 

45
இதெல்லாம் கூடாது மக்களே

பொதுவாக, துளசி மாலையை அணிந்திருக்கும் போது உணவு உண்ணுதல், தூங்குதல் போன்ற இயல்பான செயல்களுக்கு தடை இல்லை. ஆனால், பூஜை அல்லது ஜபத்தின் போது மட்டும் முழு கவனத்துடன் இருப்பது நல்லது. 

55
பக்தியின் வெளிப்பாடு செல்வமும் அமைதியும் கிடைக்கும்

துளசி மாலை அணிவது என்பது பக்தியின் வெளிப்பாடு. இது உடல், மனம் மற்றும் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் ஒரு எளிய வழியாகும். தினசரி வாழ்வில் இதைப் பின்பற்றுவோர் செல்வமும் அமைதியும் பெறுவர் என்று ஆன்மிக நூல்கள் உறுதியளிக்கின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories