Diwali 2022: தீபாவளி நாளில் விளக்கேற்றும் போதும், விளக்கேற்றிய பிறகும் கவனிக்க வேண்டியவை என்னென்ன..?

First Published Oct 22, 2022, 1:06 PM IST

Diwali lighting 2022: இந்து பாரம்பரியத்தின் படி, தீபாவளி நாளில் வீட்டில் விளக்கேற்றி ஒளி வீடு முழுவதும் பரவினால்தான் மகாலட்சுமி வீட்டுக்குள் நுழைவாள் என்பது நம்பிக்கை. 

இந்திய மக்களால் ஆண்டுதோறும், தீபாவளி திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு ஐப்பசி மாதத்தில் அக்டோபர் 24 ம் தேதி வரும் இந்த தீபாவளி பண்டிகையானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நாளில் வீடுகள் மற்றும் பூஜை அறையை அலங்கரித்து பூஜை செய்தும், புத்தாடை அணிந்து, இனிப்பு பலகாரங்கள் செய்து, உற்றார் உறவினருக்கு கொடுத்தும் இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

வீடு முழுவதும் விளக்கேற்றி பிரகாசமாக  இருக்கும் வகையில் அன்றைய தினம் முழுவதும் சிறப்பான அலங்காரங்களும் செய்கின்றனர். வாஸ்து சாஸ்திரப் படி, தீபாவளி தினத்தன்று தீபங்கள் ஏற்றுவதன் மூலம் வீட்டிலும் நம் மனதினலும் உள்ள எதிர்மறை விஷயங்களை அகற்றி, நேர்மறை எண்ணங்கள், நல்லவை வீட்டுக்குள்ளும் மனதுக்குள்ளும் நுழையும் என்பது ஐதீகம்.

மேலும் படிக்க...தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேராஸ் பண்டிகை..செல்வ வளம் பெருக, இந்த 5 பொருட்களை மறந்தும் கூட வாங்க வேண்டாம்..!

இந்த நாளில் எல்லோரும் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் வழிபடுவது அவசியம் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்து பாரம்பரியத்தில், வீட்டில் விளக்கேற்றி ஒளி வீடு முழுவதும் பரவினால்தான் மகாலட்சுமி வீட்டுக்குள் நுழைவாள் என்பது நம்பிக்கை. அப்படி நாம் இந்த நாளில்  விளக்கேற்றும்  கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன.

தீபாவளிக்கு விளக்கு ஏற்றும் போது செய்ய வேண்டியவை:

முதல் விளக்கை வீட்டின் பூஜை அறையில் ஏற்ற வேண்டும். துளசி செடி உள்ள இடத்தில், துளசி மாடத்தில் விளக்கேற்ற வேண்டும்.

செல்வ வளம் பெருகி வீட்டில் மகிழ்ச்சி நிறைய விளக்கை  கிழக்கு அல்லது வடகிழக்கு பார்த்தபடி விளக்கேற்றலாம். இது வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், விஷயங்களை அகற்றி, நலம், வளத்தை அதிகரிக்கச் செய்யும்.

நேர்மறை ஆற்றல் வீட்டில் கிடைக்க பித்தளை அல்லது மண் விளக்குகளை வைக்க வேண்டும்.  

பசு நெய் ஊற்றி ஏற்றப்படும் விளக்குகள் வீட்டுக்குள் மகிழ்ச்சியை கொண்டு வரும். நெய் விளக்கு ஏற்ற முடியாவிட்டால் நல்லெண்ணெய், கடுகு எண்ணெய்யில் விளக்கு ஏற்றலாம்.

மேலும் படிக்க...தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேராஸ் பண்டிகை..செல்வ வளம் பெருக, இந்த 5 பொருட்களை மறந்தும் கூட வாங்க வேண்டாம்..!

தீபாவளிக்கு விளக்கு ஏற்றும் போது செய்யக் கூடாதவை:

தீபாவளிக்கு விளக்கு ஏற்றிய பிறகு, நாம் பயன்படுத்திய திரிகளை எல்லாம் ஒரு கிண்ணத்தில் போட்டு வைக்க  வேண்டும்.

பிறகு சில நாட்கள் கழித்து நம்முடைய வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் எல்லோரையும் வரவழைத்து, கிழக்கு பார்த்து உட்கார சொல்லி சேகரித்த எல்லா திரியையும் போட்டு சுற்றி போட வேண்டும். 

பிறகு வாசலில் வைத்து எரித்து விட வேண்டும். இப்படி நம் செய்யும் போது, நம்மை பிடித்த பீடை, துஷ்ட சக்திகள் எதிர்மறை ஆற்றல்எல்லாமே தீயிலிருந்து எரிந்து போயிடும் .

click me!