நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் இருந்து பாடல்களைப் பாராயணம் செய்யலாம். ஆழ்வார் பாசுரங்களைச் சொல்லி பாராயணம் செய்து வழிபடலாம். விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வேண்டிக்கொள்ளலாம். அதோடு, சனிபகவானின் முன் எள் தீபம் ஏற்ற வழிபட்டு, தானம் செய்வது சிறந்த பலனைக் கொடுக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் சனி கிரக தோஷம் நீங்கும். மேலும், சனி பகவான் மனம் குளிர்ந்து அருளை அள்ளி வழங்குவார் என்பது நம்பிக்கை.